வித்தியாலய அதிபர் திரு.கே.சந்திரகுலசிங்கம் விழாவுக்குத் தலைமை வகித்தார். இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் திரு.க.ஜெயசீலன் அவர்களின் நிதியுதவியில் கோயில் மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதை முன்னிட்டு இப்பொங்கல் விழா நிகழ்வுகள் இடம் பெற்றன.
வீரகேசரி பத்திரிகையில் தம்பலகாமம் நிருபராகக் கடமையாற்றியவரும், திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளருமாகிய தம்பலகாமம் க.வேலாயுதம் இவ்விழாவில்வைத்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 91 அகவையைத் தாண்டும் அவரின் தமிழ்த் தொண்டு அளப்பெரியது.
தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.
தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.
அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.
தம்பலகாமத்தைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய ‘இரங்க நாயகியின் காதலன்’ என்னும் சரித்திர நாவலும், 'தமிழ்கேட்க ஆசை' என்ற கட்டுரைத் தொகுப்பம், அவர்வாழ்க்கை வரலாற்றை விரித்துரைக்கும் 'தம்பலகாமம் க.வேலாயுதம்' என்ற நூலும் இதுவரை வெளிவந்துள்ளன. அவர் எழுதிய 'இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்' என்ற ஆய்வு நூல் மிகவிரைவில் வெளியிடப்படவுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் திரு.க.ஜெயசீலன் அவர்களின் அன்பளிப்பில் கவிஞருக்கு பொற்கிளி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment