Wednesday, April 17, 2024

கொரோனாவும் மஞ்சள் பையும் - சிறுகதை


கொரோனா கால வைத்தியசாலை நடைமுறைகள் ஒரு போர்க்கால நிலவரம்போல் காணப்பட்டது. தினமும் அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கை கொரோனா சிகிச்சைக்காக போராடும் மருத்துவத் துறையினரை ஓய்வில்லாமல் உழைக்கவைத்துக்கொண்டிருந்தது. நாடே கொரோனா அச்சத்தில் உறைந்திருந்ததினால் வீதிகளில் மருத்துவத் துறையினரையும், அத்தியாவசிய சேவைகள் புரியும் அலுவலர்களையும், காவல் துறையினரையும் தவிர்த்து மிக அரிதாகவே சாமானியர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

விசாகன் துடிப்பான இளைஞன். அவன் அரசு மருத்துவமனையில் வேலைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. சிற்றூழியரான அவன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய கூடியவன் என்ற பெயரை வேலையில் இணைந்து கொண்ட சிறிது காலத்திற்குள்ளேயே பெற்றுக்கொண்டவன். அதனால் புதிதாகக் கொரோனா விடுதி உருவாக்கப்பட்டபோது அங்கு அவனை பணிக்கமர்த்திக் கொண்டார்கள்.

Friday, April 12, 2024

'கோணமாமலை 400'


கடந்த சில மாத காலமாக பல அன்புள்ளங்களின் துணையோடு முன்னெடுக்கப்பட்டு வந்த ஜீவநதியின் 'கோணமாமலை 400' விழிப்புணர்வு திட்டம் நிறைவுக்கு வருகிறது.

Monday, April 08, 2024

கோணமாமலை 400 - ( 1624 சித்திரை - 2024 சித்திரை )


ஜீவநதி வலைப்பதிவில் ‘கோணமாமலை 400’ என்ற காணொளிப் பதிவில் சொல்லப்பட்ட விடயங்களான…

Sunday, April 07, 2024

கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் - ஓலைச்சுவடிகள் PDF

 

Royal Asiatic Society of Great Britain and Ireland இன் உடமையில் இருக்கும், கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் ஏட்டுத்தொகுகிகள் அண்மையில் இங்கிலாந்தில் வசிக்கும் திரு குணசிங்கம் டிவாஷன் அவர்களால்  எண்ணிமப்படுத்தப்பட்டு இருந்தது.

Thursday, April 04, 2024

கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம்


அமரர் இராம பிரசாந்த் அவர்களுடைய கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம் என்ற நூல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதனை அவரது தந்தை இரா மகேந்திரராஜா தொகுத்திருந்தார். பூபாலசிங்கம் புத்தகசாலை இந் நூலினை வெளியிட்டு இருந்தது.

Tuesday, March 26, 2024

Rock Cave Temple of Thirukoneswaram and Sequelae

 

மிக அண்மையில் தான் இந்த நூல் பற்றி முதன்முறையாக நான் அறிந்து கொண்டேன். திருமதி தேவா சிவகுமார் அவர்களிடமிருந்து இந்நூலின் அட்டைப்படம் கிடைக்கப்பெற்று இருந்தது. 

Friday, March 22, 2024

போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பனில் திருக்கோணேச்சரம் சார்ந்த ஆவணங்கள்

 

1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர் பாலேந்திரா அவர்கள் போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பன் அருங்காட்சியகங்களில் இருந்த திருக்கோணேச்சரம் சார்ந்த வரைபடங்களையும், சித்திரங்களையும் சேகரித்தார். அவை போர்த்துகீசரால் திருக்கோணேச்சரம் அழிவடைவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்டவை. 

Tuesday, March 12, 2024

இலண்டன் நூலகத்தில் குளக்கோட்டன் கட்டளைகள் ( ஓலைச்சுவடிகள்)

 

இலங்கையில் உள்ள சிவாலயங்களில் திருக்கோணேச்சரம் நீண்ட, தொடர்ச்சியான தலபுராண வரலாற்றைக் கொண்ட சிவத்தலமாகும். வாயு புராணம், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகம், அப்பரும், சுந்தரரும் திருக்கோணேச்சரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேவாரப் பாடல்கள், பெரிய புராணம் போன்றவற்றில் திருக்கோணேச்சரத்தின் தலச் சிறப்பு விரிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் மச்சகேஸ்வரம் என்ற பெயராலும் அழைக்கப்பட்ட திருக்கோணேச்சரம் தேசத்துக் கோயிலாக முன்னைய காலங்களில் சிறப்பித்துக் கொண்டாடப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.